ஆப்நகரம்

ராம்குமாரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

TNN 26 Aug 2016, 9:32 pm
சென்னை: சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ramkumars judicial custody extends
ராம்குமாரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் பொறியாளரான சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, புழல் சிறையில் அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. அதனையடுத்து, அவர் நீதிமன்றக் காவலில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து அவரது நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ராம்குமாரிடம் நீதிபதி விசாரணை நடத்தி நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 1-ம் தேதி வரைக்கும், பிறகு 12-ம் தேதி வரைக்கும், அதன்பின்னர், இன்று வரைக்கும் (26.08.16) அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, ராம்குமாரின் கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க காவல்துறை அனுமதி கோரியதையடுத்து, கடந்த 17-ம் தேதியன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ராம்குமார் நேரில் ஆஜராகி, நீதிபதி முன்னிலையில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து, புழல் சிறையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் போலீசார் எழும்பூர் 13-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை விசாரித்த நீதிபதி, ராம்குமாரின் நீதிமன்ற காவலை வருகிற செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.

அடுத்த செய்தி