ஆப்நகரம்

ரம்ஜான் நோன்பு நாளை தொடக்கம் : ஷஹர் உணவு இலவசமாக வழங்க சிறப்பு ஏற்பாடு

ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

TNN 27 May 2017, 2:57 pm
ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
Samayam Tamil ramzan fasting begins tomorrow says haaji
ரம்ஜான் நோன்பு நாளை தொடக்கம் : ஷஹர் உணவு இலவசமாக வழங்க சிறப்பு ஏற்பாடு


இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் 30 நாள்களிலும் நோன்பிருந்து ஐந்து வேளை தொழுகை செய்வார்கள். மேலும் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜானுக்கு நோன்பு தொடங்கப்படுவது வழக்கம். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பை தொடங்குவார்கள்.

இந்தியா முழுவதும் ரம்ஜான் நோன்புக்கான பிறை நேற்று தென்படாததால், ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. இதற்காக, அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை இன்று முதல் தொடங்கும் என தலைமை ஹாஜி அறிவித்தள்ளார்.

மேலும், நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு சென்னையில் ’ஷஹர்’ என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி