ஆப்நகரம்

சரக்கு போதையில் டிரைவிங்..! சாக்கடைக்குள் சென்ற பி.எம்.டபிள்யூ கார்..

கன்னியாகுமரி அருகே கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாக்கடைக்குள் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Sep 2019, 8:13 pm
புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலையில் அபராதங்கள் பலமடங்கு உயர்ந்து குற்றங்கள் சற்று குறைந்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் இந்த புதிய விதி அமலுக்கு வந்துள்ளதால், தமிழகத்தில் உள்ள வாகன ஓட்டிகளுக்கும் சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பதற்காக தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.
Samayam Tamil sgggesgs



இந்நிலையில் கன்னியாகுமாரியைச் சேர்ந்த முகமது அசாருதீன் தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக மதுரை அழகர் கோவிலுக்கு வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்து நேற்று இரவு கன்னியாகுமரி செல்வதற்கு முன் முகமது மது அருந்தியுள்ளார். பின்பு மதுபோதையில் தன்னுடைய விலையுயர்ந்த காரான பி.எம்.டபிள்யூ - வை தனிமையில் இவரே ஒட்டிச் சென்றிருக்கிறார்.

கார் கள்ளந்திரி பாலம் அருகே சென்றுகொண்டிருந்த போது பாலத்திற்குப் பக்கத்திலிருந்த இடைவெளியில் எதிர்பாராதவிதமாகச் சென்றுள்ளது. இந்நிலையில் தறிகெட்டு ஓடிய கார் பாலத்தின் அடியே இருந்த சாக்கடை குழிக்குள் மாட்டிக்கொண்டது. சத்தம் கேட்டு அருகிலிருந்து ஓடி சிலர் சிறிய காயங்களுடன் இருந்த முகமதுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்தநிலையில் கார் இன்று அதிகாலையில் மீட்கப்பட்டது.

அடுத்த செய்தி