ஆப்நகரம்

சேலம்: எலிகளைப் பிடிக்க அரசு மருத்துவமனை நிர்வாகம் தீவிரம்!

சேலம் அரசு மருத்துவமனையில் எலிகளைப் பிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Samayam Tamil 21 Oct 2020, 11:42 am
சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் எலி நடமாடும் விடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் எலி கூண்டு வைக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

அரசு மருத்துவமனைகளில் எலி, பெருக்கான் பூனை, போன்றவைகளின் நடமாட்டம் அதிகரிக்கிறது. இது பல நேரங்களில் நோயாளிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

அதேபோல இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகும்போது பெயரளவில் அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

திமுக கூட்டணியில் சீட் ஒதுக்கீடு: பிகே டீம் போடும் திட்டம்!

இதேபோல சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் எலி உலாவுவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் இந்த எலி தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜன்னல் வழியாக இறங்கி, தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் வலம் வருகிறது.

ஆசிரியர்களுக்கு இனி கவலையில்லை; டெட் தேர்வு குறித்து சூப்பர் அறிவிப்பு!

இந்த வீடியோ ஊடகங்களில் வெளியானதை அடுத்து மருத்துவமனையில் முதல்வர் பாலாஜி நாதன் உத்தரவின்பேரில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி