ஆப்நகரம்

காவிரி விவகாரம் : அதிமுக எம்.பி.,யின் வீட்டுக்கு எலி மருத்து பார்சல்!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய அதிமுக எம்.பி., மகேந்திரனைக் கண்டித்து அவரது டெல்லி முகவரிக்கு கிணத்துக்கடவைச் சேர்ந்த ஒருவர் எலி மருந்து பார்சலை அனுப்பி வைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Mar 2018, 1:31 pm
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய அதிமுக எம்.பி., மகேந்திரனைக் கண்டித்து அவரது டெல்லி முகவரிக்கு கிணத்துக்கடவைச் சேர்ந்த ஒருவர் எலி மருந்து பார்சலை அனுப்பி வைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 2533dbea-b8e9-4b4b-b52f-9fb2fcbc9ea4


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் கோபமடைந்த கிணத்துக்கடவைச் சேர்ந்த பெரியார்மணி என்பவர் எம்.பி. மகேந்திரனின் டெல்லி முகவரிக்கு எலி மருந்தை கொரியர் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டைவிசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதிதீர்ப்பளித்தது. அதில், ஆ

று வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.

ஆனால்காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அதிமுக அரசு எடுக்கவில்லைஎன்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவலியுறுத்திநாடாளுமன்றத்தில் அதிமுக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது

மேலும் அதிமுகவின் அமலியால் நாடாளுமன்றம் செயல்படவில்லை. இதைத்தொடர்ந்து காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதற்கும் தயாராக உள்ளதாக அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் அதிரடியாக பேசினார்.

இந்த நிலையில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் கோபமடைந்த பெரியார்மணி, எம்.பி. மகேந்திரனின் டெல்லி முகவரிக்கு எலி மருந்தை அனுப்பி வைத்துள்ளார். இது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி