ஆப்நகரம்

ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை வலியிறுத்தி தமிழத்தில் துவங்கிய ராம ராஜ்ய ரத யாத்திரையை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்து வருவதால் சட்டசபை வளாகத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Mar 2018, 12:06 pm
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை வலியிறுத்தி தமிழத்தில் துவங்கிய ராம ராஜ்ய ரத யாத்திரையை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்து வருவதால் சட்டசபை வளாகத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது!!
சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது!!

ராஜாஜி சாலையில் அமர்ந்து ஆர்பாட்டம் செய்த ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை வலியிறுத்தி தமிழத்தில் துவங்கிய ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு தமிழகம் முழுவதும் எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று சட்டசபைக்குள் சென்ற திமுக எம்.எல்.ஏ.,க்கள் ஆளும் கட்சிக்கு எதிராக குரல் எழுப்பினர். ரத யாத்திரைக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? என்ற கேள்வி எழுப்பி, ரத யாத்திரையை தடை செய்ய வேண்டும், அதிமுக ஆட்சி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அமளியை அடுத்து சபையில் இருந்து இவர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, திமுகவினர் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ராஜாஜி சாலையில் திமுகவினர் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி, அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

தமிழகத்தில் ரத யாத்திரை மூலம் மதக் கலவரத்தைத் தூண்டும் பாஜகவை கண்டிக்கிறோம். பெரியார், அண்ணா பிறந்த மண்ணில் மதக் கலவரத்தைத் தூண்ட வேண்டாம் என்றும், மானங்கெட்ட மாநில அரசே ராஜினாமா செய் என்று ஸ்டாலின் முழங்க தொண்டர்களும், எம்.எல்.ஏ.,க்களும் கோஷம் எழுப்பினர்.
இதனால் சட்டசபை வளாகத்தில் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் ஸ்டாலின் உள்பட எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர்.
இவர்களைத் தொடர்ந்து காங்கிரசும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

அடுத்த செய்தி