ஆப்நகரம்

ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்கள்: இன்று முதல் விநியோகம்!

ஜூன் மாதத்துக்கான ரேஷன் நிவாரணத் தொகை, மளிகைப் பொருள்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

Samayam Tamil 15 Jun 2021, 7:52 am
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. முதலில் தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்த நிலையில் தளர்வுகளற்ற தீவிர ஊரடங்கு 14 நாள்கள் பின்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து பாதிப்பு குறைந்த நிலையில் தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது.
Samayam Tamil mk stalin


ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மக்களை மீட்கும் விதமாக நான்காயிரம் ரூபாய் கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அன்றே உத்தரவிட்டார். மே மாதத்துக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் ஜூன் மாதத்துக்கான நிவாரணத் தொகை 2000 ரூபாய் இன்று முதல் வழங்கப்படுகிறது.
டிடிவி தினகரன் மகள் திருமணம் தள்ளிப்போனது ஏன்?
இம்முறை நிவாரணத் தொகையுடன் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. கோதுமை மாவு-1 கிலோ, உப்பு -1 கிலோ, சர்க்கரை-500 கிராம், உளுத்தம்பருப்பு- 500 கிராம், புளி-250 கிராம், கடலை பருப்பு-250 கிராம், கடுகு-100 கிராம், சீரகம்-100 கிராம், மஞ்சள் தூள்-100 கிராம், மிளகாய் தூள்-100 கிராம், தேயிலை -100 (2 பாக்கெட்டுகள்), குளியல் சோப்-1 (125 கிராம்), சலவை சோப்-1 (250 கிராம்) ஆகிய 14 பொருட்கள் சிறப்பு தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

ஜூன் 3ஆம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. இருப்பினும் இன்று முதலே கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது.
அடேயப்பா, இத்தனை மாவட்டங்களுக்கு மழையா? சென்னைக்கும் ஹேப்பி நியூஸ்!
இதற்கான டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்களால் ஏற்கெனவே வழங்கப்பட்டது. அதில் குறிப்பிட்ட தேதி, நேரத்தின் படி மக்கள் ரேஷன் கடைகளில் தங்கள் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

அடுத்த செய்தி