ஆப்நகரம்

பொங்கல் பரிசு: ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை இதுதான்!

பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 20 Nov 2021, 11:21 am
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசு பரிசுத் தொகுப்பு அறிவித்துள்ளது.
Samayam Tamil MK STALIN RATION SHOP


அதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசி பருப்பு, நெய், மஞ்சள்துாள், மிளகாய் துாய், மல்லி துாள், கடுகு, சீரகம்,மிளகு, புளி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய பொருட்களுடன் துணி பையும் இடம்பெற்றுள்ளன

பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களை தனித்தனியாக அனுப்பாமல், அனைத்தையும் துணி பையில் போட்டு பாக்கெட் செய்து, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சசிகலா வீட்டுக்கு படையெடுக்கும் அதிமுகவினர்: எடப்பாடி தரப்பு அதிர்ச்சி!
ரேஷன் கடைகளுக்கு வழக்கமான அரிசி, சர்க்கரை போன்றவையே சரியான எடையில் அனுப்பப்படுவதில்லை. கொரோனா நிவாரணமாக தமிழ்நாடு அரசு ஜூன் மாதம் 14 வகை மளிகை பொருட்களை வழங்கியது. அதில் துணி பையும் இடம்பெற்றிருந்தது.
குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூ: தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு!
ஆனால், மளிகை தொகுப்பில் இடம்பெற்றிருந்த பொருட்கள் தனித்தனியே கடைகளுக்கு அனுப்பப்பட்டன. அவற்றை எடுத்து, ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் துணி பையில் போட்டுத்தருமாறு அதிகாரிகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தனர். இதனால், ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பல பொருட்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. இதனால், ஊழியர்களுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டது.
அந்த ப்ளூ பிலிம் சிடி ஞாபகம் இருக்கா பாபு? துளைத்தெடுத்த ரோஜா
இதே பிரச்சினை, பொங்கல் பரிசு வழங்கும் போது ஏற்படக்கூடாது. எனவே, பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் அனைத்தையும், நுகர்பொருள் வாணிபக் கழகமே துணி பையில் போட்டு, அதை யாரும் எடுக்காதபடி தைத்து, கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்பதே ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.

அடுத்த செய்தி