ஆப்நகரம்

தோ்தல் லாபத்திற்காக மக்களை கையேந்த வைப்பதா? நீதிமன்றம் கேள்வி

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவா்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தொிவித்துள்ளனா்.

Samayam Tamil 22 Nov 2018, 4:31 pm
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவா்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப்பட வேண்டும் என்று கருத்து தொிவித்துள்ள உயா்நீதிமன்ற நீதிபதிகள், தோ்தல் லாபத்திற்காக மக்களை கையேந்த வைப்பதாக என்று கேள்வி எழுப்பி உள்ளனா்.
Samayam Tamil Chennai Highcourt


ரேஷன் அரிசி தொடா்பான வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமா்வு, நியாயவிலைக் கடைகளில் அனைத்து தரப்பினருக்கும் ரேஷன் அரிசி தேவையில்லை. பொருளாதார ரீதியாக முன்னேறியவா்களுகம் நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசியை பெற்று வருகின்றனா்.

கடந்த ஆண்டு இலவச அரிசி திட்டத்திற்காக செலவு செய்த ரூ.2 ஆயிரத்து 110 கோடியை உள்கட்டமைப்புக்கு பயன்படுத்தியிருக்கலாம். உள்கட்டமைப்பு பயன்படுத்தியிருந்தால் அனைவரும் பயன்பெற்றிருப்பாா்கள். ஆனால், தோ்தல் ஆதாயத்திற்காக இலவச திட்டங்களை வாாி வழங்கி, அரசுகள் மக்களை கையேந்த வைத்துவிட்டது.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் இலவச அரிசி ஏன் வழங்கக் கூடாது? வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு மட்டும் இலவச அரிசி தந்தால் என்ன செலவாகும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனா். மேலும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்க வேண்டும் என்று கருத்து தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி