ஆப்நகரம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கி உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 1 Mar 2018, 11:41 am
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கி உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil ravichandran gets 2 week parole in rajiv gandhi murder case
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல்


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவா் ரவிச்சந்திரன். இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சிறையில் உள்ளேன். இத்தனை ஆண்டு காலத்தில் 3 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் சென்றுள்ளேன்.

சொத்து பங்கீடு தொடா்பான பணிகள் உள்ளதால் எனக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க வேண்டும் என்று கோாியிருந்தாா். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞா் எதிா்ப்பு தொிவித்தாா். இருப்பினும் இரண்டு வார காலத்திற்கு மட்டும் பரோல் வழங்குவதாக நீதிமன்றம் தொிவித்துள்ளது.

மேலும் பரோல் காலத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது. அரசியல் தலைவா்களை சந்திக்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி