ஆப்நகரம்

தமிழகத்தில் உயருகிறதா மின் கட்டணம்? முடிவை மாற்ற வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக அரசை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 8 Jun 2023, 6:54 am
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்துவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாகவும் உடனே இதை கைவிடுமாறும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil electricity meter


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 37 லட்சம் மின் நுகர்வோர்கள் பாதிக்கப்படக்கூடிய வகையில் திமுக அரசு கடந்த செப்டம்பரில் மின் கட்டணத்தை உயர்த்தியது.

தமிழகத்தில் 50 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. இதில் ஏறத்தாழ ஒரு கோடி பேர் வேலை செய்கின்றனர். கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வர முடியாமல் இருக்கும் நிலையில், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, திமுக. அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர் போராட்டங்களை நடத்தினார்.
எடப்பாடியுடன் இணக்கமாகிறாரா சசிகலா? ஓபிஎஸ், தினகரனை கை கழுவ திட்டமா?
தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்சுவது போல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள அனுமதியின்பேரில் அடுத்த மாதம் முதல் மின்கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தி 9 மாதங்களே ஆன நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்த திமுக அரசு முடிவு செய்துள்ளது.

எதிர் கட்சியாக இருந்தபோது உயர்த்தாத மின் கட்டணத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். ஆனால் இன்று அவரது ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்துகிறார். இது நியாயமா? என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக உள்ளது.

விஜய் அரசியலில் யார் வழியை பின்பற்றுவார்? கமல்ஹாசன் பாணியா, விஜயகாந்த் ரூட்டா?

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது மத்திய அரசு அழுத்தம் கொடுத்தும் நிதிச்சுமை இருந்த போதும் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதனால் இந்த மின் கட்டணத்தை உயர்வு என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இதை உடனடியாக கைவிட வேண்டும்." என்று கூறியுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி