ஆப்நகரம்

தமிழகத்தில் கோவிட்-19 உயர்விற்கு இவங்க தான் காரணமா? என்ன சொல்கிறது புள்ளிவிவரம்?

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்துள்ளதற்கு இவர்கள் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

Samayam Tamil 26 May 2020, 11:31 am
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 1.45 லட்சத்தை தாண்டியுள்ளது. இதற்கான பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி 17,082 பேர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். 8,731 பேர் குணமாகி இருக்கின்றனர். 8,232 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 119 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 11,131 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக புதிதாக ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. நேற்றைய தினம் புதிதாக 805 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் கொரோனா


இதற்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் தான் முக்கிய காரணம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதுவும் நாட்டிலேயே அதிக கொரோனா வைரஸ் பாதிப்புள்ள மகாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

அய்யோ, ராயபுரம் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

வெளிமாநிலத்தில் இருந்து திரும்பியவர்களுக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 93 பேருக்கு நேற்று வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 87 பேர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள். சென்னையின் பல்வேறு மருத்துவமனைகளில் 7 பேர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 119ஆக அதிகரித்துள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளான ராயபுரம், திரு.வி நகர் மற்றும் புளியந்தோப்பு ஆகியவற்றில் இருந்து அதிகப்படியான பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்நாட்டு விமான சேவை தொடங்கியதன் மூலம் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து திரும்பியுள்ளனர். கடந்த 10 நாட்களில் ரயில்கள் மூலமும் சாலை மார்க்கமாக பலர் வந்து சேர்ந்துள்ளனர்.

கடந்த மே 9ஆம் தேதியில் இருந்து வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 942 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிராவில் இருந்து 726, குஜராத் 21, டெல்லி 15, மேற்கு வங்கத்தில் இருந்து 19 பேர் அடங்குவர்.

பள்ளிக்கள் திறப்பு எப்போது தெரியுமா? ஆலோசனை நடத்தும் முதல்வர்!

இவர்கள் அனைவரையும் சோதனைச் சாவடிகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பரிசோதனை நடத்தி உடனடியாக தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சென்னைக்கு மட்டும் 25 விமானங்கள் வந்து சேருகின்றன. புதிய வழிகாட்டுதல்களின் படி, பயணிகள் அனைவரையும் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றார்.

அடுத்த செய்தி