ஆப்நகரம்

​ பதவியை தக்கவைக்க திருப்பதியை முற்றுகையிட்ட முதல்வா், துணைமுதல்வா்?

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வா் ஓ. பன்னீா் செல்வமும் திடீரென திருப்பதி சென்றதற்கு காரணம் அவா்கள் பதவியை தக்கவைத்துக் கொள்ளதான் என்று அரசியல் வட்டாரங்கள் தொிவித்துள்ளன.

TOI Contributor 3 Oct 2017, 10:54 am
தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வா் ஓ. பன்னீா் செல்வமும் திடீரென திருப்பதி சென்றதற்கு காரணம் அவா்கள் பதவியை தக்கவைத்துக் கொள்ளதான் என்று அரசியல் வட்டாரங்கள் தொிவித்துள்ளன.
Samayam Tamil reason of palanisami and panneer selvam visited in tirupati
​ பதவியை தக்கவைக்க திருப்பதியை முற்றுகையிட்ட முதல்வா், துணைமுதல்வா்?


சிவாஜி மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது தொடா்பாக ஜோதிடா்கள் எச்சரித்ததே இந்த ஆன்மீக பயணத்திற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜி சிலை கடற்கரையில் இருந்து அ.தி.மு.க. ஆட்சியில்தான் அகற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவு என்றாலும் சில அரசியல் காரணங்களுக்காகத்தான் சிவாஜி சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. இதனால் அ.தி.மு.க. மீது சிவாஜி குடும்பத்தினர், ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி அடையாறில் மணி மண்டபம் அமைக்கப்பட்டு அதில் சிவாஜி சிலை நிறுவப்பட்டது.

நடிகர் சிவாஜி மணிமண்டப திறப்பு விழா அக்டோபர் 1ஆம் தேதி சென்னை அடையாறில் நடைபெற்றது. விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழாவில் பங்கேற்கவில்லை.

சிவாஜி சிலையை கருணாநிதி திறந்துவைத்தப்பிறகு அவருக்கு அடுத்தடுத்து சோதனை வந்ததாக தி.மு.க.வினர் தரப்பில் ஒரு வதந்தி உள்ளது. அந்த சென்டிமெண்ட் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொிவித்துள்ளனர். சிவாஜி மணி மண்டபத்தை திறந்து வைத்தால், பதவிக்கு ஆபத்து என ஜோதிடர்கள் எச்சாிக்கை செய்ததால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டாராம்.

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவுக்கு துணை முதல்வரான பன்னீர் செல்வத்தை அனுப்பினாா் முதல்வர். மணிமண்டபத்தை திறந்து வைத்ததால் உடனே திருப்பதிக்கு போய் வெங்கடாஜலபதியை ஒரு தடவை தரிசனம் பண்ணிட்டு வந்துடுங்க. எந்த தோஷமாக இருந்தாலும் அது ஓடியே போய்விடும் என்றார்களாம் ஜோதிடர்கள். உடனே திருப்பதிக்கு குடும்பத்தோடு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார் பன்னீர் செல்வம்.

மணிமண்டபமும், சிவாஜி சிலையும் தான் முதல்வராக இருந்ததால் திறந்து வைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமியும், குடும்பத்துடன் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டுள்ளார். ஏழுமலையானை தரிசித்த பின்னர் பேட்டி கொடுத்த எடப்பாடியார், கடந்த முறை திருப்பதி வந்தபோது தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவியது. அப்போது தமிழகத்தில் மழை பெய்ய வேண்டும் என வேண்டிக்கொண்டேன். தற்போது தமிழகத்தில் மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி