ஆப்நகரம்

நாளை ரெட் அலர்ட்: 5 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்தனர்!

நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

Samayam Tamil 6 Oct 2018, 11:07 am
தமிழகத்திற்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 5 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் விரைந்துள்ளனர்.
Samayam Tamil நாளை ரெட் அலர்ட்: 5 மாவட்டங்களுக்கு தேசிய மீட்பு படையினர் விரைந்தனர்!
நாளை ரெட் அலர்ட்: 5 மாவட்டங்களுக்கு தேசிய மீட்பு படையினர் விரைந்தனர்!


தமிழகம் மற்றும் புதுவையில் 8-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 8-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த நான்கைந்து நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இது புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் நாளை அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. இதன் காரணமாக,குமரிக்கடல் பகுதி,தெற்கு கேரளம்,லட்சத்தீவு,தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அக்டோபர் 5-ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை மீனவர்கள்செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தின் மதுரை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 5 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி