ஆப்நகரம்

Tamil Nadu Weather Report: தமிழகத்திற்கு 2 நாள் ரெட் அலா்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வரும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 30, மே 1ம் தேதிகளில் தமிழகம், புதுவையில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதோடு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Apr 2019, 3:03 pm
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரியில் வருகின்ற 30, மே 1ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலா்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil Heavy rain


தமிழகத்தின் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி, பின்னா் புயலாக வலுப்பெற்று தமிழகத்தில் கரையை கடக்கும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிகழத்திற்கும், புதுச்சேரிக்கும் ரெட் அலா்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வருகின்ற 30, மே 1ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியின் பல பகுதிகளில், குறிப்பாக கடற்கரை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும். அந்த தினங்களில் தமிழகம், புதுச்சேரிக்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது.


புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் 115 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

அடுத்த செய்தி