ஆப்நகரம்

ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டது உண்மையா? : அப்பல்லோ தலைவர் பதில்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டதாக வெளியான தகவல் வதந்தியே என்று அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.

TNN 3 Feb 2017, 5:10 pm
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டதாக வெளியான தகவல் வதந்தியே என்று அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil reddy say will released jayas treatment details
ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டது உண்மையா? : அப்பல்லோ தலைவர் பதில்


தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி சிகிச்சை பலனின்றி அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.அவரது மரணம் குறித்து பல்வேறு வதந்திகளும் யூகங்களும் பரப்பப்பட்டனர்.

இந்தநிலையில் அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "மறைந்த தமிழக முதலவர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயாராக உள்ளேன். ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சையில் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை. " என்று அவர் கூறினார்.


ஜெயலலிதாவுக்கு கால் எடுக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறதே ? அது உண்மையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு பதிலளித்த அவர் , " ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தியே" என்று கூறினார்.

அடுத்த செய்தி