ஆப்நகரம்

பிகில் சிறப்பு காட்சி டிக்கெட் பணத்தை திரும்ப கொடுங்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜு

பிகில் திரைப்படத்துக்கான சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கி விட்ட நிலையில், இந்த உத்தரவால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் ரசிகர்கள் செலுத்திய பணத்தை திருப்பி ரசிகர்களிடமே திரையரங்குகள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Oct 2019, 10:14 pm
பிகில் திரைப்பட விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் தீபாவளிக்கு இத் திரைப்படம் திரைக்கு வரும் என்ற நம்பிக்கையும் கூட ரசிகர்களுக்கு இல்லாமல் போகவும் தொடங்கியது.
Samayam Tamil refund the ticket fare of bigil special show
பிகில் சிறப்பு காட்சி டிக்கெட் பணத்தை திரும்ப கொடுங்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜு


ஆனால் , கடும் சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு பிகில் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சிறப்பு காட்சிகள் எந்த திரையரங்குகளிலும் காட்சிப் படுத்தப்படக் கூடாது என்று தமிழக ஒளிபரப்புத்துறை மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து கேட்டபோது, சிறப்புக்காட்சிகள் என்ற பெயரில் திரையரங்கங்கள் அநியாயமாக வசூல் செய்கின்றன. இதனைத் தடுக்கவு ரசிகர்களின் பணத்திற்கு நியாயம் செய்யவுமே சிறப்புக் காட்சிகள் தடை செய்யப்பட்டன.

இந்த படத்திற்கு மட்டுமல்ல. இனி வரும் எல்லாப் படங்களும் இப்படித்தான். அரசு சொல்லும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.


பிகில் திரைப்படத்துக்கான சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கி விட்ட நிலையில், இந்த உத்தரவால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் ரசிகர்கள் செலுத்திய பணத்தை திருப்பி ரசிகர்களிடமே திரையரங்குகள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் ஒன்றில் தெரிவித்த கடம்பூர் ராஜு, “சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும். #TNGovt”

அடுத்த செய்தி