ஆப்நகரம்

16 ஆண்டுகள் கழித்து உறவு கொள்ள மறுப்பது வன்கொடுமை ஆகாது- நீதிமன்றம்

ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து தன் மனைவி உடலுறவுக்கு சம்மதிக்கவில்லை என வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மனைவி உறவு கொள்ள மறுப்பதை வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது என்றனர்.

Samayam Tamil 25 Jan 2019, 12:37 pm
ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து தன் மனைவி உடலுறவுக்கு சம்மதிக்கவில்லை என்பதால் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு அப்போது விவாகரத்து வழங்கப்படவில்லை. தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இதனை வன்கொடுமையாக ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
Samayam Tamil chennai high court


1998ம் ஆண்டு இவர் தன் மனைவியை காதல் திருமணம் முடித்தார். 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மனைவி உடல் உறவை மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் விவாகரத்து பெற விரும்பி 2014ம் ஆண்டு குடும்ப நல நீதிமன்றத்தில் உடலுறவை ஏற்காததை காரணம் காட்டி விவாகரத்து கோரினார். வன்கொடுமை சட்டப் பிரிவின்கீழ் விவாகரத்து கோரினார். ஆனால் இது வன்கொடுமைக்குக் கீழ் வராது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தற்போது இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதனை நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் விசாரித்தனர். ஈரோடு நபர் தன் மனைவியை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார் என அவரது மனைவி குற்றஞ்சாட்டினார். அதனால்தான் தான் உறவுக்கு சம்மதிக்கவில்லை. கணவரால் தான் வன்கொடுமை அனுபவித்ததாக அவர் கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் மனைவி உறவு கொள்ள மறுப்பதை வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது என்றனர்.

அடுத்த செய்தி