ஆப்நகரம்

மறக்க முடியாத மே 22; நினைவில் நீங்காத ’ஸ்னோலின்’ - தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சுவடுகள்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த ஓராண்டு ஆகும் நிலையில், இளம்பெண் ஸ்னோலின் கொல்லப்பட்ட நிகழ்வை யாராலும் மறக்க முடியாது.

Samayam Tamil 23 May 2019, 8:46 am
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் 100வது நாள் பேரணியின் போது, நினைத்துப் பார்க்க முடியாத பயங்கரத்தை, போலீசாரின் துப்பாக்கிகள் மூலம் தமிழக அரசு நிகழ்த்தியது.
Samayam Tamil Snowlin Tribute


பேரணியில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவி ஸ்னோலின், வாயில் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.

Police Firing: 13 அப்பாவி ஜனங்கள் சுட்டுக்கொலை: நம்மை விட்டு நீங்காத தூத்துக்குடி நினைவுகள்!

இப்படியொரு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இந்த கோர சம்பவம் நடந்து, இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் கூட்டத்திற்கு அரசு பல்வேறு வகைகளில் தடை விதித்துள்ளது.

நெஞ்சில் வடுவாய் மாறிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; முதலாண்டு நினைவு தின அஞ்சலி - படத்தொகுப்பு!

மக்கள் எழுச்சி எப்படி எழுந்தாலும், அதை ஒடுக்கியே தீருவோம் என்ற அரசின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்னோலின் நினைவிடத்தில் ஓராண்டு நினைவு தினத்தை ஒட்டி, உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் இன்று காலை அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

”தவறை தட்டிக் கேட்க வேண்டும். இந்த உலகில் பிறந்ததற்கு நம்மால் முடிந்த ஏதாவது நல்லது செய்ய வேண்டும். அதற்காக வழக்கறிஞர் பணியை தேர்வு செய்து, அதற்காகப் படிக்கப் போகிறேன்” என்று கூறியவள் ஸ்னோலின்.

இந்த வார்த்தைகள் அவளைச் சார்ந்தவர்களிடம் மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தாரிடமும் மீண்டும், மீண்டும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும். இன்னும் பல ஸ்னோலின்கள் பிறக்கட்டும். வீழ்வதற்காக அல்ல. உலகை வாழ வைப்பதற்காக.

அடுத்த செய்தி