ஆப்நகரம்

'வீரவணக்கம்' விவசாயியின் உடலை கோஷமிட்டு பெற்றுக்கொண்ட உறவினர்கள்...

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவின்படி மறு உடற்கூறுபரிசோதனை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Samayam Tamil 31 Jul 2020, 8:03 pm
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வகைக்குளத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து. இவர் வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக கடந்த 22-ந்தேதி வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
Samayam Tamil anaikarai muthu case


இந்நிலையில் வனத்துறையினர் தாக்குதலிலேயே அணைக்கரை முத்து இறந்ததாக கூறி அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடு்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அணைக்கரை முத்துவின் மனைவி பாலம்மாள் எங்களுக்கு தெரிவிக்காமலேயே உடலை உடற்கூறு பரிசோதனை செய்துவிட்டதாகவும், அவரை அடித்ததற்கான காயங்கள் உள்ளது, எனவே உடலை மறு பிரேதபரிசோதனை செய்யவேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.


வழக்கை விசாரித்த நீதிமன்றம் மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டள்ளது. இந்த உத்தரவைத்தொடர்ந்து மறு பிரேத பரிசோதனை நெல்லை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. அம்பாசமுத்திரம் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி தடயவியல்துறை தலைவர் செல்வமுருகன், தடயவியல்துறை இணைப் பேராசிரியர் பிரசன்னா தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி தடயவியல்துறை தலைவர் சுடலைமுத்து , ஆகியோர் வீடியோ பதிவுடன் உடற்கூறு ஆய்வு செய்தனர்.

இதனிடையே ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை நெல்லை அரசு மருத்துவமைக்கு நேரடியாக வந்து அணைக்கரை முத்துவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன், உடற்கூறு முடியும் வரை அவர்களுடன் மருத்துவமனை வளாகத்திலேயே அமர்ந்திருந்தார்.

இந்துக்களின் முதல் எதிரி பாஜக: திருமாவளவன் சிறப்பு பேட்டி

பின்னர் அணைக்கரை முத்துவின் மகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், '' மறு பிரேத பரிசோதனை செய்ய சொல்லிய நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது., தந்தை உடலில் காயங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. எங்களது கோரிக்கையான வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும்.

நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை வைத்து உடலை பெற்று நல்லடக்கம் செய்ய உள்ளோம் என்று கூறி உடலை பெற்று சென்றனர். முன்னதாக விவசாயியின் உடல் கொண்டு வரப்பட்டபோது உறவினர்களும், பொதுமக்களும் வீரவணக்கம் என்ட்ரி கோஷமிட்டனர்.

அடுத்த செய்தி