ஆப்நகரம்

வெடித்து சிதறிய கட்டிடம்; தரைமட்டமான அறைகள் - பட்டாசு ஆலை விபத்தில் மாயமான சிறுவன் எங்கே?

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மனித உயிர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Feb 2020, 4:56 pm
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் சின்னகாமன்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதற்கு “சூரிய பிரபா” என்று பெயரிடப்பட்டிருந்தது.
Samayam Tamil Blast


இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலைக்கு சென்று தொழிலாளர்கள் தங்கள் பணியை தொடங்கினர். வாகனம் ஒன்றில் பட்டாசு ஏற்றும் போது உராய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் பட்டாசு தொழிற்சாலையின் அனைத்து அறைகளிலும் தீப்பிடித்துக் கொண்டன. ஆலையில் சில பகுதிகள் வெடித்துச் சிதறின. மூன்று அறைகள் தரைமட்டமாகின. இந்த கோர விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி - சலுகைகளை வாரி வழங்கிய தமிழக முதல்வர்!

படுகாயம் அடைந்த 6 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சாத்தூர் வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் மீட்பு மற்றும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சூரிய பிரபா பட்டாசு ஆலை விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிமம் பெற்று இயங்கி வந்துள்ளது. ஆனால் விதிமீறலாக ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.

அதேசமயம் விதிகளுக்கு புறம்பாக அதிக அளவில் ஊழியர்களை ஈடுபடுத்தி வந்ததாகவும் தெரிகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் போலீசார் விசாரித்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் 10 வயது சிறுவனை அவனது உறவினர்கள் விபத்து நடந்த இடத்தில் தேடி வருகின்றனர்.

சென்னை போராட்டம்: கண்ணியமாக மிரட்டல் விடும் இஸ்லாமியர்கள், வியந்து பார்க்கும் போலீஸ்!

மீனம்பட்டியை சேர்ந்த அந்த சிறுவன் 10ஆம் வகுப்பை பாதியிலேயே நின்று கொண்டார். இதையடுத்து பட்டாசு ஆலையில் சேர்ந்து பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அச்சிறுவன் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சின்னகாமன்பட்டி பரபரப்பாக காட்சி அளிக்கிறது.

அடுத்த செய்தி