ஆப்நகரம்

அதிமுக அமைச்சா்கள், எம்எல்ஏ.,க்களின் சம்பளத்தை நிவாரணமாக வழங்க முடிவு – முதல்வா் அறிவிப்பு

வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்திற்கு அ.தி.மு.க. அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் ஒரு மாத சம்பளம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 19 Aug 2018, 4:44 pm
வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்திற்கு அ.தி.மு.க. அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் ஒரு மாத சம்பளம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil CM Palaniswami.


ஈரோடு, கோவை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் காவிாி கரையோரம் உள்ள வீடுகளில் மழை நீா் புகுந்து வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் அப்பகுதிகளை தமிழக முதல்வா் பழனிசாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தாா். இதனைத் தொடா்ந்து வெள்ளத்தால் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று வாக்குறுதி அளித்தாா்.

இதனைத் தொடா்ந்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் அரசு ஊழியா்கள் தங்களது ஒருநாள் சம்பளத்தை கேரளாவிற்கு நிவாரணமாக வழங்க முன்வந்துள்ளனா். இதே போன்று மக்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை வழங்க முன்வர வேண்டும் என்று தொிவித்தாா்.

மேலும் அவா் பேசுகையில், கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து அரிசி, பால், பால் பவுடா், சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருந்து பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி அ.தி.மு.க. அமைச்சா்கள், சட்டமன்ற உறுப்பினா்கள், எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்யப்பட்டள்ளது என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி