ஆப்நகரம்

Kerala Floods: மதுரை, தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக நிவாரண உதவி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு, உதவும் வகையில் மதுரை, தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்ப்பட்டுள்ளன.

Samayam Tamil 17 Aug 2018, 11:08 am
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு, உதவும் வகையில் மதுரை, தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்ப்பட்டுள்ளன.
Samayam Tamil kerala
Kerala Floods: மதுரை, தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக நிவாரண உதவி!


கேரள மாநிலம் முழுவதும் வரலாறு காணாத பெய்துவரும் கனமழையால், பொதுமக்கள் வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்து, நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரண பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.


இந்தநிலையில், மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக, கேரள மக்களுக்கு சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடுக்கி மக்களுக்கு, தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக, லாரிகள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அடுத்த செய்தி