ஆப்நகரம்

எங்கள் ஊருக்குள் மதப் பிரச்சாரங்களுக்கு அனுமதி இல்லை - அறிவிப்பு பலகை வைத்த கிராமம்!

நெல்லை: மதப் பிரச்சாரங்களுக்கு அனுமதி இல்லை என்று கிராமம் ஒன்று அறிவிப்பு பலகை வைத்துள்ளது.

Samayam Tamil 30 Jan 2019, 10:14 pm
நெல்லை மாவட்டம் பூலாங்குளம் கிராமத்தின் நுழைவு வாயிலில் வித்தியாசமான வரவேற்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Nellai Village


அதாவது, “ஊருக்குள் மதப் பிரச்சாரங்கள் செய்ய அனுமதியில்லை. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இவண்: ஊர் பொதுமக்கள் பூலாங்குளம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இந்து முன்னணியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ”விழிப்படைந்த இந்து சமுதாயம். இந்து முன்னணி யின் 36 ஆண்டுகால அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி” எனக் கூறப்பட்டுள்ளது.

அதாவது கிறிஸ்துவ மதப் பிரச்சாரங்களைத் தடுக்கவே இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

இந்த விவகாரம் பெரிதானதால், போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். கிராமத்தினரையும், அறிவிப்பு பலகை பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி