ஆப்நகரம்

வேலூரில் இரண்டு குடியரசு கட்சிகள் ஒருங்கிணைப்பு!

வேலூரில் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியும், இந்திய குடியரசு கட்சி ஜி,மூர்த்தி பிரிவும் ஒரே குடியரசு கட்சியாக இணைந்தனர்.

Samayam Tamil 3 Mar 2019, 11:23 am
வேலூரில் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியும், இந்திய குடியரசு கட்சி ஜி,மூர்த்தி பிரிவும் ஒரே குடியரசு கட்சியாக இணைந்தனர்.
Samayam Tamil வேலூரில் இரண்டு குடியரசு கட்சிகள் ஒருங்கிணைப்பு!
வேலூரில் இரண்டு குடியரசு கட்சிகள் ஒருங்கிணைப்பு!


வேலூர் மாவட்டம், நகர அரங்கில் குடியரசு கட்சிகள் கூட்டம் மாநில தலைவர் நாகமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில பொதுசெயலாளர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டன. இதில் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியும், இந்திய குடியரசு கட்சி ஜி,மூர்த்தி பிரிவும் ஒருங்கிணைந்து ஒரே குடியரசு கட்சியாக இணைந்தனர்.

மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ள குடியரசு கட்சி யாருக்கு ஆதரவளிப்பது என்பதை விரைவில் முடிவு செய்வது எனவும், தங்களை மதித்து அழைத்து பேசும் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

தலித் சமுதாய மக்கள் ஒற்றுமையுடனும், அனைத்து சமுதாய மக்களுடன் ஒருங்கிணைந்து செல்லவும் இந்திய குடியரசு கட்சி பாடுபடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அதிரூபன், பீம்ராவ் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி