ஆப்நகரம்

ஆச்சரியத் தகவல்- இலங்கை வரை நீண்டு சென்ற தமிழக நதிகள்; இது எப்படி சாத்தியம்!

தமிழகத்தில் ஓடும் நதிகள் இலங்கை வரை நீண்டு சென்ற ஆச்சரியத் தகவல் குறித்து இங்கே விரிவாக காணலாம்.

Samayam Tamil 28 Jul 2019, 3:05 pm
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிமோட் சென்சிங் துறையை சேர்ந்த பேராசிரியர்கள் சோமசுந்தரம் ராமசாமி, ஜே.சரவணவேல். இவர் மேற்கொண்ட ஆய்வை ஜூன் 25, 2019 தேதியிட்ட “Current Science" என்ற இதழில் வெளியிட்டுள்ளனர்.
Samayam Tamil Mannar Valaiguda


இந்த ஆய்வின் முடிவுகள்...

* வைகையின் துணை நதியாக தாமிரபரணி இருந்தது. இந்த நதிகள் இந்திய நிலப் பகுதிக்கு வெளியில் ஓடியுள்ளது. இதுதான் மன்னார் வளைகுடா பகுதியாக கடலில் மூழ்கிவிட்டது.

ஆய்விற்கான தூண்டுதல்...

* செயற்கைக்கோள் படங்கள் போன்று தமிழக எல்லையோரப் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் வைகை, தாமிரபரணி நதிகளின் டெல்டா பகுதிகள் திடீரென முடிந்துவிட்டன. இந்த நதிகளின் நீட்சி மன்னார் வளைகுடா பகுதியில் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதையொட்டி ஆய்வு தொடங்கியது.

கர்நாடகாவில் கனமழை..மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!

எப்படி ஆய்வு செய்தனர்...

* GEBCO இணையதளம் வழங்கிய கடல்கீழ் தரைமட்ட வரைவுப் படங்களை எடுத்துக் கொண்டனர். ArcGIS என்ற புவிசார் தகவல் மென்பொருளைப் பயன்படுத்திக் கொண்டனர். மேற்கூறியவை மூலம் வைகை, தாமிரபரணி நதிகள் பாய்ந்த தடங்களை மறு உருவாக்கம் செய்தனர்.

* பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய முகத்துவாரத்தில் இருந்து கிழக்கு நோக்கி வைகை பாய்ந்துள்ளது. ராமேஸ்வரத்திற்கு வடக்கே சென்று, பின் தெற்காக திரும்பி 400 கி.மீ தூரம் பயணித்து, இலங்கையின் தென் முனையை சென்றடைந்துள்ளது.

* 20,000 ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டம் உயர ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக இரு நதிகளும் மூழ்கி காணாமல் போனதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

மகேந்திரகிரி இஸ்ரோ மையம் பகுதியில் பறந்த விமானம்: காவல்துறை விசாரணை

முக்கியமான ஆதாரம்...

* கடல்கீழ் தரைமட்ட படங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் ராமேஸ்வரத்திற்கு கிழக்கே இருந்து, இலங்கையின் காலி வரை பெரிய பள்ளத்தாக்கு தென்பட்டுள்ளது. இந்தப் பகுதியை தற்போது மன்னார் வளைகுடா என்று அழைக்கிறோம். இதனையே வைகை நிதி ஓடிய தடம் என்று கண்டறிந்துள்ளனர்.

* தாமிரபரணி நதியின் முகத்துவாரத்தில் இருந்து ஒரு பள்ளத்தாக்கு நீள்கிறது. இது கடலுக்கு அடியில் வைகையில் பாதையில் இணைகிறது. எனவே ஒன்றின் கிளை மற்றொன்றாக இருக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர்.

அடுத்த செய்தி