ஆப்நகரம்

இவ்வளவு மழைப்பொழிவா?- அவலாஞ்சியை பார்த்து அதிர்ச்சியில் வாயை பிளந்த ஆய்வாளர்கள்!

வானிலை ஆய்வாளர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு, அவலாஞ்சியில் மழை பெய்திருப்பது, சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Samayam Tamil 11 Aug 2019, 2:43 pm
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே அமைந்துள்ளது ‘அவலாஞ்சி’. இது இந்தியாவின் இரண்டாவது ‘சிரபுஞ்சி’ என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கே அந்தளவிற்கு மழை கொட்டித் தீர்க்கிறது.
Samayam Tamil Avalanche


அவலாஞ்சியை சுற்றிலும் 7,200 ஏக்கர் பரப்பில் வனப்பகுதி உள்ளது. இதில் மழைக்காடுகள், புல்வெளிகள் அதிகம் காணப்படுகின்றன. இங்கு 160 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள அணையில் இருந்து, 40 மெகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Also Read: பொளந்து கட்டும் கன மழை; ரத்து செய்யப்பட்ட ரயில்கள், விமானங்கள் - முழு பட்டியல் இதோ!

இப்பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் விவசாயத் தொழில் செய்து கொண்டிருக்கின்றனர். இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிவது வழக்கம்.

கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், அவலாஞ்சியில் உலகமே ஆச்சரியப்படும் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

Also Read: ஒரே நாளில் 6 அடி உயர்வு; மேட்டூர் அணைக்கு பாய்ந்து வரும் காவிரி நீர்- வெள்ளப் பெருக்கால் அச்சம்!

அதாவது, கடந்த 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் 290 செமீ.,க்கு அதிகமாக மழை பெய்துள்ளது. இது நடப்பாண்டில் தேசிய அளவில் அதிகபட்ச மழை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே ஊட்டியில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை காணப்பட்டது. இதேபோல் குளிர், மழையின் போது இயல்பை விட மிகுதியாக தென்படுகிறது.

Also Read: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!

இதற்கு பருவ நிலை மாறுபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு காரணங்கள் ஆகும். இந்த மழைப்பொழிவு உண்மைதானா? இல்லையெனில் மழையை அளவிடும் கருவிகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்ற கோணங்களில் ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி