ஆப்நகரம்

இடஒதுக்கீட்டால் இவர்களின் வாழ்வாதாரம் உயரும்; அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதன் மூலம், அவர்களது வாழ்வாதாரம் உயரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Mar 2019, 3:00 pm
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்றனர்.
Samayam Tamil reservation is the key for physically challenged people says minister sengottaiyan
இடஒதுக்கீட்டால் இவர்களின் வாழ்வாதாரம் உயரும்; அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!


அதாவது, 40 பேருக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர், 120 பேருக்கு தையல் இயந்திரம், காதொலிக் கருவிகள் உள்ளிட்ட ரூ.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

அவருடன் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழங்கினர். பின்னர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கென 4 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் மூலம், அவர்களது வாழ்வாதாரம் உயரும் என்றார். இதே போல் பேட்டரி மூலம் இயக்கப்படுகின்ற வீல் சேர், ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி