ஆப்நகரம்

பதவி விலகிய சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர்

அண்மையில் பதவி விலகிய 10 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக முதலமைச்சரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர்

TNN 25 Feb 2016, 12:10 pm
சென்னை: அண்மையில் பதவி விலகிய 10 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக முதலமைச்சரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
Samayam Tamil resigned tn mlas join admk in the presence of jayalalitha
பதவி விலகிய சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர்


கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதியன்று தேமுதிகவை சேர்ந்த எட்டு அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மாஃபா பாண்டியராஜன், சாந்தி, தமிழழகன், சுந்தர் ராஜன், மைக்கேல் ராயப்பன், அருண் பாண்டியன், அருண் சுப்பிரமணியன் மற்றும் சுரேஷ் ஆகியோரும், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் கலையரசு, புதிய தமிழகம் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர்.

இந்நிலையில், இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில், அவர் முன்னிலையில் மேற்கூறிய பத்து பேரும் அதிமுகவில் இணைந்தனர்.

அடுத்த செய்தி