ஆப்நகரம்

“அடையாறு மற்றும் கூவம் ஆற்றினை மீட்டெடுக்க வேண்டும்” : சென்னை உயர்நீதிமன்றம்!

“அடையாறு மற்றும் கூவம் ஆற்றினை மீட்டெடுக்க வேண்டும்” : சென்னை உயர்நீதிமன்றம்!

TNN 24 Mar 2017, 7:29 pm
சென்னை : தற்போது மோசமான நிலையில் இருக்கும் அடையாறு மற்றும் கூவம் ஆற்றினை தமிழக அரசு பழையபடி மீட்டெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil restore cooum and adayar rivers to their past glory madras hc tell tn govt
“அடையாறு மற்றும் கூவம் ஆற்றினை மீட்டெடுக்க வேண்டும்” : சென்னை உயர்நீதிமன்றம்!


சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆம்எம்டி டீகா ராமன் அடங்கிய பெஞ்ச் அடையாறு மற்றும் கூவம் ஆறு மாசுபட்டிருப்பதை தாமாக முன்வந்து விசாரித்தது. இதனையடுத்து தமிழக அரசு உயர் மட்ட குழு ஒன்றை அமைத்து இரண்டு ஆறுகளையும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கழிவு நீர் மற்றும் வடிகால் பகுதியாக மாறியிருக்கும் அடையாறு மற்றும் கூவம் ஆறுகள் சுத்தம் செய்யப்படவேண்டும். நகரின் 20 முதல் 25 கிமீ சுற்றுவட்டாரத்தில் 50 முதல் 100 ஏக்கர் பரப்பளவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. கழிவு நீர் மற்றும் வடிகால் நீரானது, சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி சுத்தம் செய்யப்பட்டு பின்னர் ஆறுகளில் விட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இப்படி சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்றும், அந்தக்காலத்தில் இருந்தது போல் அடையாறு மற்றும் கூவம் ஆறுகள் படகு பயணம் செய்வது போல் மாற்ற வேண்டும் என்றும், அவற்றின் புகழை மீட்டெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் சுவாசிக்க மக்களுக்கும் சுத்தமான காற்றும் கிடைக்கும். எனவே தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி பெற்று ஆறுகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை ஜூன் 30ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி