ஆப்நகரம்

மணிரத்னம் படத்தில் பணியாற்றிய அபிநந்தனின் தந்தை

சிம்மக்குட்டி வர்த்தமான் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தில் இந்திய விமானப்படை குறித்து படக்குழுவுக்கு ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.

Samayam Tamil 27 Feb 2019, 8:27 pm
பாலகோட் விமானத் தாக்குதலின்போது பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிபட்ட சென்னையைச் சேர்ந்த அபிநந்தன் என்ற விமானியின் தந்தை சிம்மக்குட்டி வர்த்தமான். இவர் முன்னாள் இந்திய விமானப்படை வீரர் ஆவார். இவர் தாம்பரம் அருகேயுள்ள மடப்பாக்கம் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
Samayam Tamil abi



சிம்மக்குட்டி வர்த்தமான் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தில் இந்திய விமானப்படை குறித்து படக்குழுவுக்கு ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். படத்தில் நாயகன் கார்த்தி இந்திய விமானப்படையில் பணிபுரிவதாக நடிப்பதால் விமானப் படை குறித்த தகவல்களை துல்லியமாகத் தெரிந்துகொள்ள மணிரத்னம் சிம்மக்குட்டியை நாடியுள்ளார். காற்று வெளியிடை படத்தில் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் சிம்மக்குட்டி கலந்து கொண்டார். இந்திய விமானப்படை வீரரின் வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்டு உருவான காற்று வெளியிடை போன்ற வித்யாசமான படங்கள் தொடர்ந்து வர வேண்டும். வீரர்களின் கடினமான வாழ்க்கை உலகுக்கு இதன்மூலம் தெரிய வரும் என்றார்.

அடுத்த செய்தி