ஆப்நகரம்

தனியொரு ஆளாக வனத்தை உருவாக்கிய திருப்பூர் ஆசிரியை!

திருப்பூர் மாவட்டம், நாராயண நாயக்கன்புதூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர், தனியொரு ஆளாக வனத்தை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

Samayam Tamil 2 Dec 2018, 2:03 pm
திருப்பூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர், தனியொரு ஆளாக வனத்தை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
Samayam Tamil turu


திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள நாராயண நாயக்கன்புதூரைச் சேர்ந்தவர் தாயம்மாள். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர், மரங்கள் வளர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

இவர் 'வனத்துக்குள் திருப்பூர்’ என்னும் திட்டத்தில் இணைந்து, சுமார் 500க்கும் மேற்பட்ட மலை வேம்பு, பெரு மரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்த மரங்கள் வளர்ந்து இன்று காடு போல் காட்சியளிக்கிறது. இதனாலே இவரை அப்பகுதி பொதுமக்கள், மரங்களின் தாயார் என்று அடைமொழியுடன் அழைக்கின்றனர்.

தனியொரு ஆளாக வனத்தை உருவாக்கிய திருப்பூர் ஆசிரியை!


அத்துடன் நில்லாது, மருத்துவ குணமிக்க செடிகளையும் தனது உறவினர்கள் உதவியுடன் தாயம்மாள் வளர்த்து வருகிறார். கோடை காலத்தில் மரங்களை பாதுகாக்கும் வகையில், சொட்டு நீர் கட்டமைப்பையும் தனது தோட்டத்தில் உருவாக்கியுள்ளார்.

கடந்தாண்டு வறட்சி ஏற்பட்ட போது, ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி ஊற்றி மரங்களை பட்டு போகாமல் பாதுகாத்த தாயம்மாள், மரங்களை பெற்ற பிள்ளை போல் வளர்த்து வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி