ஆப்நகரம்

அரிசி ஆலையில் இடி தாக்கியது; சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பரிதாப பலி

செங்கம் அருகே இடி தாக்கி அரிசி ஆலை இடிந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

TNN 26 May 2017, 8:54 pm
திருவண்ணாமலை: செங்கம் அருகே இடி தாக்கி அரிசி ஆலை இடிந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
Samayam Tamil rice mill collapsed and 6 dead in tiruvannamalai
அரிசி ஆலையில் இடி தாக்கியது; சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பரிதாப பலி


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தளவநாயக்கன்பேட்டையில் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் ஆலை மீது இடி தாக்கியதில், அதன் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. அதில் ஆலையில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதேசமயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களின் உடல்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. தீயணைப்புத்துறையினர் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Rice mill collapsed and 6 dead in Tiruvannamalai.

அடுத்த செய்தி