ஆப்நகரம்

ஆபத்தோடு விளையாடும் இளைஞர்கள்; வைரல் வீடியோ குறித்து தீவிர விசாரணை!

சென்னை: இளைஞர்கள் செய்யும் சாகச நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 13 Nov 2018, 4:39 pm
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பேருந்தின் ஜன்னலைப் பிடித்துக் கொண்டு, சக்கரத்தில் நின்றவாறு பயணித்த இளைஞரின் வீடியோ வைரலானது. அதேபோல் விஜய் ரசிகர் என்று கூறிக் கொண்டு, சர்கார் பேனர்களை சேதப்படுத்தியவர்களை கொன்றுவிடுவதாக மிரட்டும் இரு இளைஞர்களின் வீடியோவும் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Travel


இந்த மூன்று இளைஞர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் குறித்து, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் எந்தவொரு கிடைக்கவில்லை.

பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களை போலீசார் கண்டித்தும், பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. சென்னை பாலம் ஒன்றில் பயணிக்கும் பேருந்தில் இளைஞர் தொங்கிக் கொண்டே செல்லும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பேருந்து எண் குறித்து கண்டறிய முடியவில்லை. சம்பந்தப்பட்ட இளைஞர் மெர்சல் பாலா என்ற பெயரில் டிக் டாக் ஆப் மூலம், வீடியோ வைரலாக்கி உள்ளார்.

இரண்டாவது வீடியோவில் இருக்கும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால், 044 23452 348, 044 234 523 50 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி