ஆப்நகரம்

ஆர்.கே.நகரில் 4 மடங்கு கூடுதல் செலவு: தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலை நடத்த இதுவரை வழக்கத்தை விட 4 மடங்கு அதிகமான தொகை செலவிடப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

TNN 19 Dec 2017, 3:56 pm
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலை நடத்த இதுவரை வழக்கத்தை விட 4 மடங்கு அதிகமான தொகை செலவிடப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rk nagar by election becomes 4 times costlier says ec
ஆர்.கே.நகரில் 4 மடங்கு கூடுதல் செலவு: தேர்தல் ஆணையம்


சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் நாளை மறுநாள் (டிசம்பர் 21) நடைபெற உள்ளது. கடந்த முறை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா காரணமாக ரத்துசெய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. கடைசி நாளில் எல்லா கட்சிகளும் வண்டி கட்டிக்கொண்டு தொண்டர் படையைத் திரட்டிக்கொண்டு சென்னையில் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆங்காங்கே கூட்டம் போட்டு பேசும் அரசியல்வாதிகளால் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள சாலையில் விரையும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சக்கி அவதிப்படுகின்றனர்.

இதனிடையே, தேர்தல் ஆணையம் இதுவரை இடைத்தேர்தல் பணிக்கு செய்யப்பட்ட செலவு குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. வழக்கமாக ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த சராசரியாக ரூ.75 லட்சம் வரை செலவாகும். ஆனால், இந்த இடைத்தேர்தலுக்கு இதுவரை ரூ.3 கோடி செலவிடப்பட்டுவிட்டது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அடுத்த செய்தி