ஆப்நகரம்

ஆர்கே நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்படும் அபாயம்!

ஆர்கே நகர் இடைத்தேர்தல் நெருங்க, நெருங்க பரபரப்பு மிக அதிகமாகிக்கொண்டே செல்கின்றது.

TNN 17 Dec 2017, 12:41 pm
சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தல் நெருங்க, நெருங்க பரபரப்பு மிக அதிகமாகிக்கொண்டே செல்கின்றது.
Samayam Tamil rk nagar by election cancelled
ஆர்கே நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்படும் அபாயம்!


வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் தினுசு, தினுசா யோசனை செய்து கொடுக்கப்படுகிறது. இதுவரை 2 லட்சம் வாக்காளர்களுக்கு, தலா 6 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து விட்டதாக தினகரன் மற்றும் திமுக தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

மறுபுறம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்களை நடத்தி போலீஸ் மற்றும் துணை ராணுவ படையினருக்கு பெரும் சவாலாக செய்து வருகின்றனர். திமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் சிறப்பு தேர்தல் அதிகாரி பாத்ராவை சந்தித்து அதிமுக.,வினர் பணம் கொடுத்தது ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது.

இதை மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிகிறது. அப்படி அனுப்பப்பட்டால் விசாரணை தீவிரமாக்கப்படும், அதனால் எந்த நேரமும் ஆர் கே நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட கூடாது, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த செய்தி