ஆப்நகரம்

தேர்தல் பணிக்கு மத்திய போலீசார்; தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு

ஆர்.கே நகரில் தேர்தல் முடியும் வரை முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படை வரவழைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை வைத்துள்ளது.ஆர்.கே நகரில் தேர்தல் முடியும் வரை முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படை வரவழைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு சமர்பித்துள்ளது.

TNN 4 Dec 2017, 4:12 pm
ஆர்.கே நகரில் தேர்தல் முடியும் வரை முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படை வரவழைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு சமர்பித்துள்ளது.
Samayam Tamil rk nagar byelection dmk demands deployment of crpf personnel in all streets
தேர்தல் பணிக்கு மத்திய போலீசார்; தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு


இன்று திமுக எம்.பி. பாரதி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், கடந்த முறை ஆர்.கே நகரில் தேர்தல் நடைபெறும் போது, பல்வேறு முறைகேடுகள், பணபட்டு வாடா நடைபெற்றதாகவும், இம்முறை அதை தடுக்கும் வகையில், மத்திய பாதுகாப்பு படையினரை, பாதுகாப்பு பணியில் வரவழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்கே நகரில், ஒரு தெருவுக்கு குறைந்தது, இரண்டு மத்திய போலீசாராவது, பணியில் அமர்த்த வேண்டும் என்றும், அதே போல், சமூக விரோத நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில், சிசிடிவி காமிராக்களையும் பொருத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அடுத்த செய்தி