ஆப்நகரம்

ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி திடீர் மாற்றப்பட்டு பிரவீன் நாயர் நியமனம்

ஆர்.கே நகர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த பத்மஜா தேவி திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

TNN 18 Mar 2017, 3:40 pm
சென்னை : ஆர்.கே நகர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த பத்மஜா தேவி திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
Samayam Tamil rk nagar election officer transferred
ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி திடீர் மாற்றப்பட்டு பிரவீன் நாயர் நியமனம்


ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முக்கிய கட்சிகள் அறிவித்துள்ளனர்.

அதிமுக - டிடிவி தினகரன்
திமுக - மருது கணேஷ்
ஓபிஎஸ் அணி - மதுசூதனன்
தேமுதிக - மதிவாணன்
பஜாக - கங்கை அமரன்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்டோர் போட்டி களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக பத்மஜா தேவி நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் பத்மஜா தேவியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி