ஆா்.கே.நகா் இடைத்தோ்தலில் வேட்புமனு நிராகாிக்கப்பட்ட விவகாரத்தில் நடிகா் விஷால், நீதி கிடைக்கும் என்று நம்புவதாக பிரதமா் மோடிக்கு டுவிட்டா் மூலம் கோாிக்கை வைத்துள்ளாா்.
ஆா்.கே.நகா் இடைத்தோ்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தலில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழா் கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் என 145 வேட்புமனுக்கள் வழங்கப்பட்டன. இந்த வேட்புமனுக்கள் மீதான பாிசீலனை நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் விஷாலின் மனுவைப் பரிசீலனை செய்தபோது, சுயேச்சை வேட்பாளர்கள் தினேஷ், பிரேம்குமார் உள்ளிட்டவர்கள், விஷாலின் வேட்பு மனுவில் முன்மொழியப்பட்டவர்களின் கையெழுத்து போலியானவை உள்ளிட்ட சில காரணங்களை கூறி விஷாலின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தொிவித்தனர்.
இதையடுத்து, மனுவை ஆய்வுசெய்த தேர்தல் அதிகாரி வேலுச்சாமி, விஷாலின் மனுவை நிறுத்திவைப்பதாக அறிவித்தார். பின்னர், மாலை விஷாலின் மனு மீண்டும் பரிசீலிக்கப்பட்டது. அப்போது, திடீரென விஷால் மனுவில் முன்மொழியப்பட்ட சுமதி, தீபன், கார்த்திகேயன் ஆகிய மூன்று பேர் தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்கு வந்தனர். அப்போது, "நாங்கள் மனம் உவந்து மனுவை முன்மொழியவில்லை. மனுவில் போலியாக எங்கள் பெயர் போடப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, விஷாலின் மனுவை நிராகரிப்பதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் சாலையில் மறியல்செய்தார். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர், விஷால் மீண்டும் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். மேலும், தன்னிடம் இருந்த ஆதாரத்தை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல்செய்தார். அதன் அடிப்படையில் மனுவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தனது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக விஷால் தெரிவித்தார்.
ஆனால் திடீரென இரவு 11 மணிக்கு தோ்தல் அதிகாாி விஷாலின் வேட்பு மனு நிராகாிக்கப்படுவதாக அறிவித்தாா். அவரை முன்மொழிபவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் வேட்புமனு நிராகாிக்கப்படுவதாக விளக்கமளித்தாா். மொத்தமாக தாக்கல் செய்யப்பட்ட 145 மனுக்களில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 73 மனுக்கள் நிராகாிக்கப்பட்டுவிட்டதாகவும் தெவாிவித்தாா்.
To the people, I look upto, Hon @narendramodi & Hon @rashtrapatibhvn I am Vishal,I hope u r aware of wats happening in the RK Nagar Election process in Chennai. My nomination was accepted & later rejected. Totally unfair. I bring this to your notice & I hope justice prevails. — Vishal (@VishalKOfficial) December 6, 2017 இந்த நிலையில், தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோருக்கு டுவிட்டர் மூலம் விஷால் கோரிக்கை வைத்துள்ளார். பிரதமரின் டுவிட்டர் கணக்கை டேக் செய்து கருத்து தெரிவித்துள்ள விஷால், "ஆர்.கே.நகர் தொகுதியில் எனது வேட்பு மனு ஏற்கப்பட்டு, பின்னர் நிராகரிக்கப்பட்டது என்பது நீதிக்குப் புறம்பானது. இடைத்தேர்தலில் என்ன நடக்கிறது என்பது தங்களுக்குத் தெரியும் என நம்புகிறேன். வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
ஆா்.கே.நகா் இடைத்தோ்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தலில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழா் கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் என 145 வேட்புமனுக்கள் வழங்கப்பட்டன. இந்த வேட்புமனுக்கள் மீதான பாிசீலனை நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் விஷாலின் மனுவைப் பரிசீலனை செய்தபோது, சுயேச்சை வேட்பாளர்கள் தினேஷ், பிரேம்குமார் உள்ளிட்டவர்கள், விஷாலின் வேட்பு மனுவில் முன்மொழியப்பட்டவர்களின் கையெழுத்து போலியானவை உள்ளிட்ட சில காரணங்களை கூறி விஷாலின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தொிவித்தனர்.
இதையடுத்து, மனுவை ஆய்வுசெய்த தேர்தல் அதிகாரி வேலுச்சாமி, விஷாலின் மனுவை நிறுத்திவைப்பதாக அறிவித்தார். பின்னர், மாலை விஷாலின் மனு மீண்டும் பரிசீலிக்கப்பட்டது. அப்போது, திடீரென விஷால் மனுவில் முன்மொழியப்பட்ட சுமதி, தீபன், கார்த்திகேயன் ஆகிய மூன்று பேர் தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்கு வந்தனர். அப்போது, "நாங்கள் மனம் உவந்து மனுவை முன்மொழியவில்லை. மனுவில் போலியாக எங்கள் பெயர் போடப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, விஷாலின் மனுவை நிராகரிப்பதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் சாலையில் மறியல்செய்தார். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர், விஷால் மீண்டும் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். மேலும், தன்னிடம் இருந்த ஆதாரத்தை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல்செய்தார். அதன் அடிப்படையில் மனுவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தனது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக விஷால் தெரிவித்தார்.
ஆனால் திடீரென இரவு 11 மணிக்கு தோ்தல் அதிகாாி விஷாலின் வேட்பு மனு நிராகாிக்கப்படுவதாக அறிவித்தாா். அவரை முன்மொழிபவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் வேட்புமனு நிராகாிக்கப்படுவதாக விளக்கமளித்தாா். மொத்தமாக தாக்கல் செய்யப்பட்ட 145 மனுக்களில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 73 மனுக்கள் நிராகாிக்கப்பட்டுவிட்டதாகவும் தெவாிவித்தாா்.
To the people, I look upto, Hon @narendramodi & Hon @rashtrapatibhvn I am Vishal,I hope u r aware of wats happening in the RK Nagar Election process in Chennai. My nomination was accepted & later rejected. Totally unfair. I bring this to your notice & I hope justice prevails. — Vishal (@VishalKOfficial) December 6, 2017 இந்த நிலையில், தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோருக்கு டுவிட்டர் மூலம் விஷால் கோரிக்கை வைத்துள்ளார். பிரதமரின் டுவிட்டர் கணக்கை டேக் செய்து கருத்து தெரிவித்துள்ள விஷால், "ஆர்.கே.நகர் தொகுதியில் எனது வேட்பு மனு ஏற்கப்பட்டு, பின்னர் நிராகரிக்கப்பட்டது என்பது நீதிக்குப் புறம்பானது. இடைத்தேர்தலில் என்ன நடக்கிறது என்பது தங்களுக்குத் தெரியும் என நம்புகிறேன். வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.