ஆப்நகரம்

இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு முதல் முறையாக ஆர்.கே.நகர் தொகுதிக்குச் சென்றுள்ளார் டிடிவி தினகரன்

TNN 3 Jan 2018, 4:14 pm
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு முதல் முறையாக ஆர்.கே.நகர் தொகுதிக்குச் சென்றுள்ளார் டிடிவி தினகரன்.
Samayam Tamil rk nagar mla ttv dinakaran arrived his constituency office in chennai on wednesday
இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன்!


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் சென்ற மாதம் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக போன்ற பிரதான கட்சிகளை வீழ்த்தி சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் வெற்றிப் பெற்றார்.

இந்நிலையில், வெற்றிப் பெற்று 10 நாட்களுக்கு மேலாகியும் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதிக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதையடுத்து, அவர் மக்களுக்கு 20 ரூபாய் நோட்டு டோக்கன் வழங்கியதாகவும், அந்த டோக்கனுக்கு பணம் வழங்காததால்தான் தொகுதிக்கு செல்லவில்லை என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து, புதன்கிழமை மாலை ஆர்.கே.நகரின் புதுவண்ணாரப்பேட்டை, செரியன் நகர் பகுதிகளுக்குச் சென்று தினகரன் நன்றி கூறப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தற்போது அவர் ஆர்.கே.நகர் தொகுதி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் டோக்கனுக்கு பணம் பெறும் நம்பிக்கையில் உள்ளனர்.

அடுத்த செய்தி