ஆப்நகரம்

எவ்வளவு பணம் கொடுத்தாலும் வெற்றி எங்களுக்கு தான்: தமிழிசை!

'வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும், வெற்றி பா.ஜ.,வுக்கு தான் '' என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை தெரிவித்துள்ளார்.

TNN & Agencies 14 Dec 2017, 1:29 am
சென்னை: 'வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும், வெற்றி பா.ஜ.,வுக்கு தான் '' என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rk nagar voters will only vote for bjp says tamilnadu bjp leader tamilisai
எவ்வளவு பணம் கொடுத்தாலும் வெற்றி எங்களுக்கு தான்: தமிழிசை!


சென்னை, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில், பா.ஜ., சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை ஓட்டு சேகரித்தார்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் தொகுதி முழுதும் பணப் பட்டுவாடா நடக்கிறது. வாக்காளர்களை வேறு தொகுதிக்கு அழைத்து பட்டுவாடா செய்கின்றனர்.

ஜெயிலுக்கு சென்றவர்கள், ஜெயிலுக்கு போக வேண்டியவர்கள் மத்தியில், நாங்கள் வெயிலில் ஓட்டு சேகரிக்கிறோம். வாக்காளர்கள், பணம் வாங்கி கொண்டு ஓட்டு அளிக்க கூடாது. அப்படியே பணம் வாங்கினாலும், பா.ஜ.,வுக்கு தான் ஓட்டளிப்பர்.’ என்றார்.

RK Nagar voters will only vote for BJP says TamilNadu BJP leader Tamilisai

அடுத்த செய்தி