ஆப்நகரம்

இறையன்புவிடம் ரிப்போர்ட் கேட்ட ஆர்.என்.ரவி: உடனே பதில் சொல்லுங்க!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 18 May 2023, 1:29 pm
கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil irai anbu and rn ravi


சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு எதற்கு நிவாரணம் என்று இது தொடர்பாக விமர்சனமும் எழுந்து வருகின்றன.

கள்ளச்சாராயம் விவகாரம் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு வருகின்றன.

ரூட்டை மாற்றும் வைத்திலிங்கம்? ஓபிஎஸ் ஸுக்கு டாட்டா காட்டும் நேரம் வந்துருச்சா?

இந்நிலையில் கள்ளச்சாரயம் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமைச் செயலாளர் இறையன்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? கள்ளச் சாராயம் எப்படி விற்கப்படுகிறது? கள்ளச் சாராயம் விற்கப்படவில்லை எனில், எப்படி ஒரே நாளில் இத்தனை பேர் கைது செய்யப்பட்டது ஏன்? “ என்பன குறித்து தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

அண்ணாமலைக்கு டெல்லியிலிருந்து வந்த உத்தரவு: வெளியில் கேட்ட எடப்பாடியின் மைண்ட் வாய்ஸ்!

முன்னதாக கள்ளச்சாராயத்தால் நேரிட்ட மரணம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி