ஆப்நகரம்

மாஞ்சோலையில் வேன் கவிழ்ந்து விபத்து!

மாஞ்சோலை மலைச் சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

Samayam Tamil 10 Mar 2020, 9:34 am
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மாஞ்சோலை மலைச் சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.
Samayam Tamil மாஞ்சோலையில் வேன் கவிழ்ந்து விபத்து


திருநெல்வேலி அருகே உள்ள மானூரைச் சேர்ந்த விக்டர் மகன் ஏசுராஜன் என்பவருக்கும் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தில் உள்ள நாலுமுக்குப் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் உறுதி செய்வதற்காக குடும்பத்தினர் வேனில் உறவினர்களுடன் நாலுமுக்குச் சென்றனர்.

நிகழ்ச்சி முடிந்து மாலை ஊருக்குத் திரும்பும் போது மணிமுத்தாறு தலையணைக்கு சிறிது முன்பு மூன்று முடங்கி என்ற இடத்தில் வரும்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ரஜினிகாந்த் சிக்குவாரா? தண்டனை கிடைக்குமா?- எழும்பூர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

இந்த விபத்தில் ஏசுராஜன் தாயார் அன்னாள் (65), சகோதரி ஏசு மரியாள் (32) உறவினர் கருப்பசாமி மனைவி அதிசயராணி (45) ஆகியோர் காயமடைந்தனர்.

அவர்களை உடனடியாக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து. கல்லிடைக்குறிச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி