ஆப்நகரம்

வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலருக்கு 5 ஆண்டுகள் சிறை!

வழிப்பறி வழக்கில் முன்னாள் காவலருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1,000 அபராதமும் விதித்து கோவில்பட்டி சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Samayam Tamil 19 Jan 2019, 12:25 pm
வழிப்பறி வழக்கில் முன்னாள் காவலருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவில்பட்டி சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Samayam Tamil வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலருக்கு 5 ஆண்டுகள் சிறை!
வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலருக்கு 5 ஆண்டுகள் சிறை!


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்தவர் காவேரிமணியன் (33). இவர் கடந்த 2013-ம் ஆண்டு கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றினார்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்குமுன், கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த செந்தில்குமார், அவரது உறவினர் செல்வி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அவர்களை வழிமறித்த காவேரிமணியன் கும்பல் அவர்களிடம் இருந்த, 2 பவுன் மோதிரம் மற்றும் 2 கிராம் சங்கிலி ஆகியவற்றை பறித்தது.

அவர்களின் சத்தம் கேட்டு ஓடிவந்த பார்த்த அக்கம்பக்கத்தினர், காவேரிமணியனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இதேபோல், கழுகுமலையில் 2 பெண்களிடம் 11.5 பவுன் நகை பறித்தது, கயத்தாறை சேர்ந்த முருகானந்தம் என்பவரை மிரட்டி ஒரு பவுன் மோதிரத்தை பறித்தது தொடர்பாகவும், காவேரிமணியன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து காவேரிமணியனும், அவரது கூட்டாளிகளான வெங்கடேஷ், கணேசன், சுடலைமணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காவேரிமணியன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், செந்தில்குமார் மற்றும் செல்வியிடம் நகைபறித்த வழக்கில், காவேரிமணியனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து, சார்பு நீதிபதி ஏ.கே.பாபுலால் தீர்ப்பளித்தார்.

மற்ற 2 வழக்குகளில் காவேரிமணியன் விடுதலை செய்யத நீதிபதி, அவரது கூட்டாளிகள் 3 பேரும் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

அடுத்த செய்தி