ஆப்நகரம்

வழிப்பறி முயற்சி: பெண் உள்பட இருவர் பலி

தலைநகர் சென்னையில் நிகழ்ந்த வழிப்பறி முயற்சியில் பெண் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 5 Jul 2016, 9:13 am
சென்னை: தலைநகர் சென்னையில் நிகழ்ந்த வழிப்பறி முயற்சியில் பெண் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil robbery try woman dead in chennai
வழிப்பறி முயற்சி: பெண் உள்பட இருவர் பலி


சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் நந்தினி மற்றும் அவரது தோழி லட்சு ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை பின் தொடர்ந்து வேறொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், அப்பெண்களிடம் வழிப்பறி செய்ய முயற்சித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு அப்பெண்கள் வேகமாக சென்ற போது, வாகனம் நிலை தடுமாறி முதியவர் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நந்தினி மற்றும் முதியவர் ஆகியோர் உயிரிழந்தனர். நந்தினியின் தோழி லட்சு படுகாயமடைந்தார்.

இச் சம்பவத்தை பார்த்த அப்பகுதி வாசிகள், கொள்ளையர்களில் ஒருவரான கருணாகரன் என்பவரை மடக்கிப் பிடித்தனர். அவரை அடித்து துவைத்த பொதுமக்கள், அதன்பின் போலீசாரிடம் ஒப்படைந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே இந்த விபத்து நடந்ததால் அக்கடையை மூடக் கோரியும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

சம்பவம் நடந்த இடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் டிகே ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி