ஆப்நகரம்

சங்மா மறைவுக்கு ஜெயலலிதா, ரோசையா இரங்கல்

மேகாலய முன்னாள் முதல்வரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான பி.ஏ.சங்மா மறைவுக்கு தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் ரோசையா ஆகியோர்தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர்

TNN 4 Mar 2016, 3:59 pm
சென்னை: மேகாலய முன்னாள் முதல்வரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான பி.ஏ.சங்மா மறைவுக்கு தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் ரோசையா ஆகியோர் தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil rosaiah jayalalithaa condole sangmas death
சங்மா மறைவுக்கு ஜெயலலிதா, ரோசையா இரங்கல்


தமிழக ஆளுநர் ரோசையா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பி.ஏ. சங்மாவின் மரணம் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக மேகாலையா மாநில மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கட்சி வேறுபாடுகளை தாண்டி அனைவரின் அபிமானத்தையும் தனது திறமை மற்றும் பேச்சாற்றலால் பெற்றவர் சங்மா.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய சேவையும், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக அவர் செயலாற்றியதும் என்றும் அழிக்க முடியாதது.

அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு எல்லா வல்ல இறைவன் பலம் கொடுக்க வேண்டும் என்றும் சங்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி