ஆப்நகரம்

ஜெயலலிதாவை நெருங்கிய முதல் பெண்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நெருக்கமாக சந்தித்த முதல் பெண் என்ற பெயருக்கு பாத்திரமாகியிருக்கிறார் ஆளுநர் ரோசய்யாவின் மருமகள்.

TNN 29 Jul 2016, 7:12 pm
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நெருக்கமாக சந்தித்த முதல் பெண் என்ற பெயருக்கு பாத்திரமாகியிருக்கிறார் ஆளுநர் ரோசய்யாவின் மருமகள்.
Samayam Tamil rosaiahs son meets jayalalitha to invite for his sons marriage
ஜெயலலிதாவை நெருங்கிய முதல் பெண்!


தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பேரனுக்கு வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. அதற்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து திருமண அழைப்பிழை அளிக்க ரோசய்யாவின் மகன் ஸ்ரீமந் நாராயணனனும் அவரது மனைவியும் சென்றுள்ளனர்.

அப்போது, திருமண அழைப்பிழை ஜெயலலிதாவிடம் அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு அவரது நெற்றியிங் பொட்டும் வைத்துள்ளார் ரோசய்யாவின் மருமகள்.

முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திப்பவர்கள் சற்று தொலைவில் நின்று தான் பேச வேண்டும் என்றும் கை குலுக்க கூடாது என்றும் பொன்னாடை போற்றக்கூடாது என்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை வெகு நெருக்கத்தில் சந்தித்து நெற்றியில் திலகமிட்டவர் என்ற பெருமை ரோசய்யாவின் மருமகளுக்குக் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி