ஆப்நகரம்

மறுபடியும் ரூட்டு தல பிரச்சினையா? - தலைநகரில் மீண்டும் தலைவலி

ரூட்டு தல பிரச்சினைகளால் அண்மைக்காலமாக தமிழகத்தின் தலைநகர் படாதபாடு பட்டது. சினிமா ரவுடிகளைப்போல மாணவர்கள் நடுரோட்டில் நீளமான பட்டாக்கத்திகளோடு சண்டையிட்டுக்கொண்ட அவலம்........ ....

Samayam Tamil 19 Sep 2019, 5:34 pm
ரூட்டு தல பிரச்சினைகளால் அண்மைக்காலமாக தமிழகத்தின் தலைநகர் படாதபாடு பட்டது. சினிமா ரவுடிகளைப்போல மாணவர்கள் நடுரோட்டில் நீளமான பட்டாக்கத்திகளோடு சண்டையிட்டுக்கொண்ட அவலத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு கவலையும் அடைந்தனர்.
Samayam Tamil RT students


மாணவர்களின் மனநிலை ஏன் இப்படி ஆகிறது. இவர்களுக்கு வழங்கப்படும் கல்வியின் தரம் இவ்வளவுதானா? என்றும் சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலரையும் அழைத்து கண்டிப்பான முறையில் அறிவுரை கூறிய காவல்துறை , இனிமேல் தவறு செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியும் ஏற்கச் செய்தது. சிலர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை கால்களில் எலும்புமுறிவும் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குநர் லெனின்பாரதி “இதுபோல நடித்து இந்த மாணவர்களின் மனதை மாற்றியிருக்கும் நடிகர்களின் கை கால்கள் முறியுமா?” என்று நடிகர்களுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேபோல, சினிமாவில் வரும் ஆக்ரோஷ வன்முறைக்காட்சிகளால் மாணவர்கள் இப்படிப்பட்ட மனநிலைக்கு ஆளாகிறார்கள் என்று கல்லூரி ஆசிரியர்கள் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
படிக்கும்போது ஹீரோ போன்ற தோற்றத்தை தரலாம். ஆனால், வாழ்க்கை வேறு என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
வினோத், முன்னாள் ரூட்டு தல
இப்படியிருக்க, சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரி மாணவர்களுக்குள் நேற்ற் மீண்டும் கடும் சண்டை நடந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக வெளியில் இருந்து சக நண்பர்களை அழைத்து கலவரம் தீவிரமடைந்தது. ரயிலில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறை, சுமார் 9 மாணவர்களை இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 160ன் கீழ் கைது செய்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் ரூட்டு தலயாக இருந்த மானவர் வினோத் சமயம் தமிழுக்கு தெரிவித்தபோது, இது மாணவர்களின் விவகாரம். படிக்கும்போது அது ஒரு ஹீரோ போன்ற தோற்றத்தை தரலாம். ஆனால், படித்துமுடித்த பிறகு வாழ்க்கை வேறாக இருக்கிறது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்”. என்று தெரிவித்தார்.

இந்த நேரத்தில் நேற்றுதான் நடிகர் விஜய் கையில் கத்தியுடன் போஸ் கொடுக்கும் படம் சமூக வலைதளங்களில் வெளியானது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது..

அடுத்த செய்தி