ஆப்நகரம்

Rowdy Dhanasekar: சென்னை: காவல் நிலையம் அருகிலேயே பிரபல ரவுடி வெட்டிக்கொலை

சென்னை திருவான்மியூரில் காவல் நிலையம் அருகிலேயே பிரபல ரவுடி தனசேகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Jul 2018, 1:13 pm
சென்னை திருவான்மியூரில் காவல் நிலையம் அருகிலேயே பிரபல ரவுடி தனசேகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil dalit murderes


சென்னை எண்ணூர் அன்னைசிவகாமி நகரைச் சேர்ந்தவர் தனசேகர்(42). சென்னையின் பிரபல ரவுடியான இவர் மீது ஆள்கடத்தல், கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் பல்வேறு காவல்நிலையத்தில் உள்ளன. அவ்வபோது ஜாமீனில் வெளிவரும் தனசேகர், தலைமறைவாகி போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்துவார்.

இந்நிலையில், சென்னை திருவான்மியூர் அவ்வை நகரில் உள்ள காவல்நிலையத்தில் ஆஜராகி ஜாமீன் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வரும் போது அவரை பின் தொடர்ந்த மர்மநபர்கள், காவல்நிலையம் அருகிலேயே அவரை சராமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

கொலை செய்த மர்மநபர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி