ஆப்நகரம்

வேலூரில் ரவுடியை கல்லை போட்டு கொன்ற பெண்; போலீசார் அதிர்ச்சி - பொதுமக்கள் நிம்மதி!

வேலூர்: பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடி அடித்துக் கொல்லப்பட்டார்.

Samayam Tamil 18 Nov 2018, 5:59 pm
வேலூர் சத்துவாச்சாரி இந்திரா நகர் குருத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ்(35). இவர் பிரபல ரவுடி வசூர் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி. தங்கராஜ் மீது 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Samayam Tamil Vellore Rowdy


இவருக்கு அதே பகுதியில் கணவரைப் பிரிந்து வாழும் தண்டுமாரி(39) என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தங்கராஜ் குடிபோதையில் தண்டுமாரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது தகராறு ஏற்பட்டு, கூர்மையான ஆயுதத்தால் தண்டுமாரியை தங்கராஜ் தாக்கியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, தண்டுமாரியின் மூத்த மகன் தர்மன்(19) ஓடி வந்தார். அப்போது தர்மனையும் தாக்கியுள்ளார்.

இதையடுத்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தண்டுமாரியும், தர்மனும் கையில் கிடைத்த ஆயுதத்தால் தங்கராஜை தாக்கியுள்ளனர். தலையில் கல்லைப் போட்டு முகத்தைச் சிதைத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ரவுடி தங்கராஜ் உயிரிழந்தார்.

இதையடுத்து இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தங்கராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடியவர்களை தேடி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ரவுடி தங்கராஜ் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவர் இறந்தது பெரும் நிம்மதியை அளிக்கிறது என்று கூறினர்.

இந்த சூழலில் சத்துவாச்சாரி பகுதியில் பதற்றம் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி